தமிழ்நாடு

வைகை அணையின் நீர்மட்டம் சரிவு : பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்

வைகை அணையின் நீர்மட்டம் குறைந்ததால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வைகை அணையின் நீர்மட்டம் குறைந்ததால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் வைகை அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. முதல்போக பாசன பகுதிகளுக்கு வரும் 20ம் தேதி வரையிலும், இரண்டாம் போக பாசனத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரையிலும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் 5 நாட்கள் இடைவெளிவிட்டு தண்ணீர் குறிப்பிட்ட நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்