ஈரோடு மாவட்டம் ஆலமரதோட்டம் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, வீட்டு காவலுக்காக கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிய நிலையில், மற்றொரு நாயை கடித்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்த நிலையில், மேலும் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்