தமிழ்நாடு

சட்டப்பல்கலை. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று துவங்கியது.

தந்தி டிவி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசையின்படி கட் - ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் படிப்புகளான B.Com LLB, BCA LLB படிப்புகளுக்கான சேர்க்கையை சட்ட துறை அமைச்சர் சிவி.சண்முகம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலந்தாய்வில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையையும் வழங்கினார்.

இதையடுத்து, 5 ஆண்டு படிப்பான BA LLB, BBA LLB படிப்பில் சேருவதற்கு, நாளை ஜூன் 18-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்