தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு ADGP ஆயுதப்படை DGP-ஆக நியமனம்

தந்தி டிவி

70 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு

70 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் 3 டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும், 15 எஸ்பிக்கள் டிஐஜிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சட்டம்–ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆயுதப்படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு, சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், அதே பிரிவில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பால நாகதேவி, டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு, சிவில் சப்ளை சிஐடி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல சிபிசிஐடி ஐஜி அன்பு, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு ஆவடி ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், தலைமையக கூடுதல் டிஜிபியாகவும்.. ஆவடி ஆணையர் சங்கர், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்