தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு ADGP ஆயுதப்படை DGP-ஆக நியமனம்

தந்தி டிவி

70 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு

70 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் 3 டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும், 15 எஸ்பிக்கள் டிஐஜிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சட்டம்–ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆயுதப்படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு, சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், அதே பிரிவில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பால நாகதேவி, டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு, சிவில் சப்ளை சிஐடி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல சிபிசிஐடி ஐஜி அன்பு, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு ஆவடி ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், தலைமையக கூடுதல் டிஜிபியாகவும்.. ஆவடி ஆணையர் சங்கர், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’

LPG | EB Subsidy Tamilnadu | சிலிண்டர் தட்டுப்பாட்டால் - `மானியம்’ அறிவித்து முதல்வர் அதிரடி

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு