"டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இலவச லேப்டாப்"
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முடுக்குப்பட்டி பகுதியில் என் வாக்குச்சாவடி என் உரிமை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தபின், அவர் இதனை தெரிவித்தார்.