தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் வேல் விவகாரம் - காவல்நிலையம் முற்றுகை -

சாலையில் வேல் வரைந்தவர்கள் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தவர்களை கண்டித்து கோவையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிலர் வேல் வரைந்தனர். சுந்தராபுரம், குனியமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் குறுக்கே வேல் வரையப்பட்டு வெற்றி வேல், வீர வேல் என எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குனியமுத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், முருகர் பாடல் பாடி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. அப்போது, காவல் துறையினர் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை