தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் வேல் விவகாரம் - காவல்நிலையம் முற்றுகை -

சாலையில் வேல் வரைந்தவர்கள் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தவர்களை கண்டித்து கோவையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிலர் வேல் வரைந்தனர். சுந்தராபுரம், குனியமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் குறுக்கே வேல் வரையப்பட்டு வெற்றி வேல், வீர வேல் என எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குனியமுத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், முருகர் பாடல் பாடி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. அப்போது, காவல் துறையினர் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி