தமிழ்நாடு

காருக்குள் இருந்த துப்பாக்கி : கார் கண்ணாடியை உடைத்து திருடிய கும்பல்

திருச்சி அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து துப்பாக்கி மற்றும் குண்டுகள் திருடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கும்பகோணத்தைச் சேர்ந்த நடையழகன் என்பவர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் என்ற பகுதியில் உள்ள உணவகம் முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கார் கண்ணாடி உடைக்கும் சப்தம் கேட்க, நடையழகனும் அவரின் மனைவியும் வந்து பார்த்தனர். அப்போது காருக்குள் இருந்த ஐபாட், லேப் டாப், துப்பாக்கி மற்றும் 19 குண்டுகள் திருடப்பட்டதை அறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ராம்ஜி நகரைச் சேர்ந்த சுதன் என்பதை உறுதி செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். துப்பாக்கி மற்றும் குண்டுகளுடன் தலைமறைவாகியுள்ள சுதனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்