தமிழ்நாடு

9 உலோக சிலைகள் திருட்டு வழக்கு - மேலும் 3 பேர் கைது

வேதாரண்யம் அருகே 9 உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பல்வேறு கோவில்களில் திருடப்பட்ட 9 உலோக சிலைகள் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5க்கும் மேற்பட்ட கோவில்களில் குருக்களாக பணிபுரிந்து வந்த பைரவ சுந்தரம் மற்றும் அவருக்கு உதவிய செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடைய நைனா முகமது, பிரபாகரன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் 3 பேரையும் கும்பகோணத்தில் உள்ள நீதிபதிகள் வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்