தமிழ்நாடு

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு

கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், வளையபேட்டையில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் கும்பகோணம் நகராட்சியின் 45 வார்டுகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வளையபேட்டை அக்ரஹாரம் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகம் உடைப்பை சரி செய்து தண்ணீரை வீணாக்காமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு