தமிழ்நாடு

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு

கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், வளையபேட்டையில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் கும்பகோணம் நகராட்சியின் 45 வார்டுகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வளையபேட்டை அக்ரஹாரம் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகம் உடைப்பை சரி செய்து தண்ணீரை வீணாக்காமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை