தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி சுற்றுலா தலங்களுள் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. கொரோனா காரணமான பொது முடக்கத்தில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத் துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.