KanniyaKumari | Tasmac Protest | மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் | போராட்டக்காரர்களுடன் மதுப்பிரியர்கள் வாக்குவாதம்
மதுப்பிரியர்கள் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு மூடப்பட்ட டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில், பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை 13 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால், எதிர்க்கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், இன்று திடீரென கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சியினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். அப்போது மது வாங்க வந்தவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.