தமிழ்நாடு

பூமிக்கு அடியில் பாதுகாப்பான முறையில் அணு கழிவு புதைக்கப்படுகிறது - கூடங்குளம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதில்

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளை பாதுகாப்பான முறையில் பூமிக்கு அடியில் புதைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் ஞானதிரவியம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் , அணு உலையில் தற்போது சேமிக்கப்பட்டு வரும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்னதாகவே, கழிவுகளை சேமித்து வைப்பதற்கான இடத்தை கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் அடையாளம் கண்டு வருவதாக குறிப்பிட்டார். தற்போது சேமிக்கப்பட்டு வரும் கழிவுகள் பூமியிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் சேமிக்கப்பட்டு 40 ஆண்டுகள் அங்கிருந்து மீண்டும் அவை மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை