தமிழ்நாடு

கூடலூர் மண்ணுக்குள் புதையும் வீடுகள்.. வெளியாகாத ஆய்வு முடிவுகள் - பீதியில் மக்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மண்ணுக்குள் புதைந்த வீடுகள் பற்றிய ஆய்வுகள் வெளியிடப்படாததால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோக்கால் கிராம மலைப்பகுதியில், ஒன்றரை மாதம் முன்பு பெய்த கன மழையில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. நாளடைவில் அது பிளவாக மாறி, வீடுகள் மற்றும் அருகில் இருந்த முதியோர் இல்லக் கட்டிடம் ஆகியவை 7 முதல் 8 அடி மண்ணில் புதைந்தன. இதில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அருகில் உள்ள கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்று இங்கு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில், நான்கு இந்திய புவியியல் துறை வல்லுநர்கள், அதிநவீன கருவிகளுடன் வந்து, அந்த பகுதியில் 15 நாட்கள் ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிந்து பத்து நாட்கள் ஆகிய நிலையில், ஆய்வு முடிவுகள் பற்றி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது இந்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆய்வு முடிவுகளை வெளியிடும்படி அந்த பகுதி மக்கள் கோருகின்றனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்