இந்நிலையில் இன்று அரக்கோணத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்களை கூட்டத்தில் அழகிரி கலந்து கொண்டார்.. கூட்டம் முடிவடைந்த உடன் தன்னால் தாக்கப்பட்ட நரேசின் வீட்டிற்கு சென்றார் .. திடீரென்று தமது வீட்டிற்கு வந்த கட்சித் தலைவரைப் பார்த்து நரேஷ் திக்கு முக்காடிப் போனார்.. நரேசுடன் அவர்ந்து சிறிது நேரம் பேசிய அழகிரி , அன்றைய நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றார் . அழகிரியின் இந்த செயலைப் பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்