தமிழ்நாடு

கே.ஆர்.எஸ். அணை நிரம்புவதால் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.எஸ். அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகாவின் குடகு, சிக்மகளூரு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கபினி, ஹேரங்கி அணைகள் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இதனால் கபினியில் இருந்து விநாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல், கே.ஆர்.எஸ் அணையும் தனது முழுக்கொள்ளளவான 124 புள்ளி 80 அடியில், 121 புள்ளி 42 அடியை எட்டியுள்ளது.

இதனால் அணையில் இருந்து எந்த நேரமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால், தமிழகத்தின் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு