தமிழ்நாடு

பணம் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்.. மறுத்த மனைவி.. பிளேடால் கழுத்தறுத்து கொலை

தந்தி டிவி

பணம் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்.. மறுத்த மனைவி.. பிளேடால் கழுத்தறுத்து கொலை

ஓசூர் அருகே குடும்பத் தகராறில், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கீழ்சூடாபுரம் பகுதியை சேர்ந்த கல்பனா, பெயிண்டராக பணியாற்றி வந்த ஆனந்தகுமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தார். மதுப்பழக்கமுடைய ஆனந்த குமார், பணம் கேட்டு கல்பனாவிடம் அடிக்கடி தகராறு செய்வார் என கூறப்படுகிறது. வழக்கம்போல், மதுபோதையில் கல்பனாவிடம் தகராறில் ஈடுபட்ட ஆனந்தகுமார், திடீரென பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்து தப்பியுள்ளார். இதில் காயமடைந்த கல்பனா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் தப்பியோடிய கணவர் ஆனந்த்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Breaking | Vijay | Sangeetha | கேஸ் போட்ட மனைவி | விஜய்க்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | Arvind Kejriwal | விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் | அதிரடியில் இறங்கிய சிபிஐ

Breaking | Vijay | "நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.."விவாகரத்து மனுவில் ஷாக் மேல் ஷாக்

🔴LIVE : முதல்வர் ஸ்டாலின் பேச்சு | நேரலை காட்சிகள் | CM Stalin | MK Stalin | Speech | DMK

BREAKING | Sangeetha | Vijay | சங்கீதா விவாகரத்து மனுவில் விஜய் குறித்து பகீர் தகவல்