தமிழ்நாடு

ஏலச்சீட்டில் ரூ.1.5 கோடியை அமுக்கிய கும்பல்... கதறிய பொதுமக்கள் - "கண்டுகொள்ளாத காவல்துறை?"

தந்தி டிவி

ஓசூரில், ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புகார் அளித்து 2 மாதங்கள் ஆகியும்,வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து,பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மூக்கொண்டப்பள்ளி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், குமாரி,உஷா,விக்னேஷ், ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி உள்ளனர். இவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தலா 1 லட்சம், 2 லட்சம், 3 லட்சம் என 5 லட்சம் வரையில் மாத சீட்டும், தீபாவளி சீட்டும் போட்டுள்ளனர். அவர்களுக்கு சீட்டு பணம் தராமல் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, முதலீட்டாளர்கள், கிருஷ்ணகிரியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி