தமிழ்நாடு

காதல் திருமணம் - 3 ஆண்டுகளில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

திருமணமான 3 ஆண்டுகளில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் திவ்யா. 21 வயதான இவர், அதே ஊரை சேர்ந்த கதிரவன் என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டாரை எதிர்த்து காதல் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் காவேரிப்பட்டணம் கொசமேட்டில் வசித்து வந்த நிலையில், திடீரென வீட்டிற்குள் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் - 3 ஆண்டுகளில் இளம் பெண்

எடுத்த விபரீத முடிவு 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ