தமிழ்நாடு

காட்டிற்குள் விடப்பட்ட 2 வயது பெண் குழந்தை...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், 2 வயது பெண் குழந்தை காட்டிற்குள் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், 2 வயது பெண் குழந்தை காட்டிற்குள் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலுமலை காப்புக்காட்டை அடுத்துள்ள பீஜிதுர்க்கம் காட்டுபகுதியில் தனியாக நின்று, அழுது கொண்டிருந்த குழந்தையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டுள்ளனர். விசாரணையில், காட்டில் விடப்பட்ட குழந்தையின் பெயர் மனுத்ரி என்றும், அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

* தனது பெற்றோரே தன்னை காட்டிற்குள் விட்டுச் சென்றதாக மனுத்ரி தெரிவித்துள்ளார். குழந்தையின் கைரேகைகளைக் கொண்டு ஆதார் மூலம், பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்