கிருஷ்ணகிரியில் மான் கறியை வீடு வீடாகச் சென்று டோர் டெலிவரி செய்த நபரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அருகிலுள்ள பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், வனப்பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலீசார் அவரது வீட்டை சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சியையும், இரண்டு மான் தலைகளும் சிக்கின. இதையடுத்து, பெருமாளை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.