சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை - பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முக்கையா மற்றும் நிர்வாகிகள், இந்த தகவலை வெளியிட்டனர்.