தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையை விடாத கொரோனா - பூ மார்க்கெட் வியாபாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை கோயம்பேடு சந்தையை ஒட்டியுள்ள தெருக்களிலும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது.

தந்தி டிவி

கோயம்பேடு சந்தை ஒட்டியுள்ள அவ்வை திருநகர் தெரு, காந்தி தெரு உள்ளிட்ட தெருக்களை சேர்ந்த 5 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மயிலாப்பூர், சேத்துப்பட்டு, அசோக் நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு நபர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 46 வயது மருத்துவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே முதுநிலை படிப்பை படித்து வந்த ஒரு இதே போல், கோயம்பேடு பூ மார்க்கெட்டைச், சேர்ந்த 5 வியாபாரிகளுக்கு இன்று கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்