தமிழ்நாடு

சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த எலினா.. இறுதி சடங்கிற்கு சென்ற மாணவர்கள் - பள்ளி நிர்வாகம் எடுத்த முடிவு

தந்தி டிவி

கோவை கூடைப்பந்து வீராங்கனை எலினா உடல், கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள், பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் கேரளாவிற்கு சென்றனர். எலினாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் உள்ள அவரது வீட்டின் அருகே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வீராங்கனை உயிரிழந்ததை தொடர்ந்த, அவர் படித்த பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தை அணுகிய போது, மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் முழு விவரம் தெரியவரும் எனக் கூறியுள்ளது.இதனிடையே, ரயில் உணவை சாப்பிட்டு கூடைப்பந்து வீராங்கனை இறந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM