கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த துரைசாமி என்பவர் தன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பீரோவில் இருந்த 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.