தமிழ்நாடு

கோவை: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் - 4 பேர் கைது

கோவை மதுக்கரை சுங்கச்சாவடி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கோவை மதுக்கரை சுங்கச்சாவடி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற, 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி உணவுக்கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், காய்கறி கழிவுகளுக்கு கீழ், ரேசன் அரிசியை மறைத்து கடத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர், லாரி ஓட்டுனரும், உரிமையாளருமான முரளிதரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்