தமிழ்நாடு

கோவை : மாற்றுத்திறளாளி குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கோவை நல்லாம்பாளையம் வ.உ.சி. நகரில் வசிப்பவர் சிவகுமார்.

தந்தி டிவி

கோவை நல்லாம்பாளையம் வ.உ.சி. நகரில் வசிப்பவர் சிவகுமார். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 13 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும், பதினோரு வயதில் பிரனேஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் வாய்பேச முடியாதவர்கள் என கூறப்படுகிறது. சிவக்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால், கவுரி சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது தந்தை வீட்டில் வசித்து வந்த கவுரி, வீட்டில் யாரும் இல்லாத போது, இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் தூக்கு மாட்டி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி