தமிழ்நாடு

கட்டைப்பையில் கதறி அழுது கொண்டிருந்த குழந்தை...

கோவை அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள கலை கல்லூரி சாலையில், கட்டைப்பையில் கதறி அழுது கொண்டிருந்த, பிறந்து சில நாட்களான குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தந்தி டிவி
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சந்திரசேகர் மற்றும் சத்தியதரன், நேற்று இரவு தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு கலைக் கல்லூரி சாலை வழியாக தங்களின் இருப்பிடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பார்த்த போது, அரசு மருத்துவமனையின் பின் வாசலின் அருகே உள்ள நடைபாதையில் இருந்த கட்டைப்பையில் பிறந்து சுமார் ஏழே நாட்கள் ஆன ஆண் குழந்தை ஒன்று கதறி அழுது கொண்டிருந்தது. இதையடுத்து, மாணவர்கள் அளித்த தகவலை பேரில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குழந்தையை மாணவர்கள் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலையை பரிசோதித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் குழந்தைகள் நலத்துறையினர் குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை