Kovai | தேர்தல் பறக்கும் படையினருடன் திமுகவைச் சேர்ந்தவர் வாக்குவாதம் - கோவையில் பரபரப்பு கோவை பேரூர்-சிறுவாணி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், தி.மு.க கொடி கட்டிய காரை நிறுத்தி, தேர்தல் நடத்தை விதிப்படி கொடியை அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதற்கு, “ஸ்பேனர் இல்லாமல் கொடியை கழற்ற முடியாது” என அந்த நபர் மறுப்பு தெரிவித்தார். மேலும், கொடியுடன் செல்ல அனுமதி கேட்ட நிலையில், அதிகாரிகள் மறுத்தனர். இதையடுத்து, ஸ்பேனர் எடுத்து வந்து கொடியை அகற்றுவதாக கூறி, காரை அங்கேயே நிறுத்தி விட்டு அவர் சென்றார்.