தமிழ்நாடு

பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபரீதம்

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் பகுதியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் பகுதியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவர் யாரும் இல்லாதததால் செவிலியர் முத்துக்குமாரிக்கு பிரசவம் பார்க்க முயன்றுள்ளார். குழந்தை முழுமையாக வெளியே வரும் முன்பே, செவிலியர் அலட்சியமாக, குழந்தையின் தலையை மட்டும் பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதில் குழந்தையின் தலை துண்டானது. உடல் பாகங்கள் தாயின் வயிற்றுக்குள்ளே இருந்தது. மேல்சிகிச்சைக்காக பொம்மி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் பாகங்கள் எடுக்கப்பட்டது. இதற்கு காரணமான செவிலியர் முத்துகுமாரி மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்