தமிழ்நாடு

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம்

கூடங்குளத்தில் 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக 2 வது அணு உலையில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து அதே மாதம் 26 ந்தேதி மாலை மீண்டும் மின் உற்பத்தி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை பராமரிப்பு பணிக்காக மீண்டும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலாவது அணு உலை கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பராமரிப்பு மற்றும் எரிப்பொருட்கள் நிரப்பும் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அணு உலைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மின் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்