தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனால் கடைமடைக்கு வராத தண்ணீர் - விவசாயிகள் மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கொள்ளிடம் ஆற்றில் இருந்து, வடவாறு பாசனத்திற்கு, பாலையூர் வாய்க்கால்களில் இருந்து கண்ணாரப்பேட்டை, துளசேந்திரபுரம், தென்பரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்லும் நிலையிலும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால்,விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து, திருமக்கோட்டை- மன்னார்குடி சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை