தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனால் கடைமடைக்கு வராத தண்ணீர் - விவசாயிகள் மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கொள்ளிடம் ஆற்றில் இருந்து, வடவாறு பாசனத்திற்கு, பாலையூர் வாய்க்கால்களில் இருந்து கண்ணாரப்பேட்டை, துளசேந்திரபுரம், தென்பரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்லும் நிலையிலும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால்,விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து, திருமக்கோட்டை- மன்னார்குடி சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ