கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் வீடியோவை வெளியிட்ட சாம் மேத்யூஸ், மனோஜ், சயான் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.