தமிழ்நாடு

கொடைக்கானலில் பெண் தீக்குளித்த விவகாரம் - காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்தவர் கைது

கொடைக்கானலில் பெண் தீக்குளித்து தற்கொலையான விவகாரத்தில், காப்பாற்ற‌ாமல் வீடியோ எடுத்த‌ மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி
கொடைக்கானலில் பெண் தீக்குளித்து தற்கொலையான விவகாரத்தில், காப்பாற்ற‌ாமல் வீடியோ எடுத்த‌ மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கணவனை பிரிந்த 32 வயது மாலதியும், கே.சி. பட்டியைச் சேர்ந்த சதீசும் காதல் ஜோடிகளாக வாழ்ந்துள்ளனர். இதனிடையே, சதீஷ்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தன்னோடு வாழ்ந்துவிட்டு வேறொரு பெண்ணை மணந்தது குறித்து நியாயம் கேட்க சென்ற மாலதியை, அங்கிருந்தவர்கள் அலட்சியமாக பேசி விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த மாலதி, சதீஷின் வீட்டு வாசலில் தீக்குளித்தார். இதில், ஏற்கனவே ஒருவரை கைது செய்த நிலையில், காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த ச‌ர‌வ‌ண‌குமார் என்ப‌வ‌ரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை