Kodaikanal Traffic | ரோட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் - ஸ்தம்பித்த கொடைக்கானல் கொடைக்கானலில் வனத்துறையினர் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முறையால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதே இதற்குத் காரணம் என கூறப்படுகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தால், வாகனங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதாக தெரிவித்துள்ளனர். பழைய நடைமுறைப்படி அந்தந்த சுற்றுலாத் தலங்களிலேயே நுழைவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.