Kodaikanal | மொத்தமாக படையெடுத்த சுற்றுலா பயணிகள் - ஸ்தம்பித்த கொடைக்கானல்
கொடைக்கானல் மலைச்சாலைகளில் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடை மற்றும் வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முழுவதும் பிரதான சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் காலை முதலே வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா தளங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருவதுடன் உள்ளூர் மக்களும் தங்களது வேலைகளுக்கு செல்ல பெரும் அவதி அடைந்து வருகின்றனர்...