கொடைக்கானலில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தை எதிர்த்து தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோக்கர்ஸ் வாக் அருகே உள்ள நிலம் தேவாலயத்திற்கு சொந்தமானது என கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் மறியல் செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.