தமிழ்நாடு

புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்

கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகிறது.

தந்தி டிவி

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் விதமாக 10 கோடி ரூபாய் செலவில் புதிதாக ரோஜா பூங்கா மற்றும் கொய் மலர் சாகுபடி கூடம் கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கபட்டது. சுமார் 16 ஆயிரம் வண்ண வண்ண ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு தீவிரமாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்பொழுது சீசன் துவங்கியுள்ளதால் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கி, சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தி வருகின்றன. பூங்காவில் உள்ள மலர்கள் தங்களை அதிகம் கவர்ந்துள்ளதாகவும், அதிகப்படியான வண்ன மலர்களை ஒரே இடத்தில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்