தமிழ்நாடு

விதிமீறிய 39 கட்டடங்களின் மின்இணைப்பு துண்டிப்பு

பழைய மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும் என புகார்

தந்தி டிவி
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக கட்டியுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மூஞ்சிக்கல் அண்ணாசாலை, லேக் ரோடு, நாயுடுபுரம் உள்ளிட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே, மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா பயணிகள் வருகை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாஸ்டர் பிளான் என்ற திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கட்டட உரிமையாளர்கள், 1983-ம் ஆண்டின் மாஸ்டர் பிளான் இன்றுவரை மாற்றப்படாமல் உள்ளதாக கூறினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை