தமிழ்நாடு

விதிமீறிய 39 கட்டடங்களின் மின்இணைப்பு துண்டிப்பு

பழைய மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும் என புகார்

தந்தி டிவி
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக கட்டியுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மூஞ்சிக்கல் அண்ணாசாலை, லேக் ரோடு, நாயுடுபுரம் உள்ளிட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே, மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா பயணிகள் வருகை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாஸ்டர் பிளான் என்ற திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கட்டட உரிமையாளர்கள், 1983-ம் ஆண்டின் மாஸ்டர் பிளான் இன்றுவரை மாற்றப்படாமல் உள்ளதாக கூறினர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்