தமிழ்நாடு

விதிமீறிய 39 கட்டடங்களின் மின்இணைப்பு துண்டிப்பு

பழைய மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும் என புகார்

தந்தி டிவி
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக கட்டியுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மூஞ்சிக்கல் அண்ணாசாலை, லேக் ரோடு, நாயுடுபுரம் உள்ளிட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே, மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா பயணிகள் வருகை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாஸ்டர் பிளான் என்ற திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கட்டட உரிமையாளர்கள், 1983-ம் ஆண்டின் மாஸ்டர் பிளான் இன்றுவரை மாற்றப்படாமல் உள்ளதாக கூறினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்