தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலில் திடீர் தீ விபத்து.. அவசர அவசரமாக மாற்றப்பட்ட நோயாளிகள்

தந்தி டிவி

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்தவமனையின் இரண்டாவது தளத்தில், கரும்புகையுடன் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த நோயாளிகள் வேறொரு அறைக்கு மாற்றப்பட்ட நிலையில் இதுகுறித்து மருத்துவ ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீயானது உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. பின்னர் தகவல் அறிந்த வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்