தமிழ்நாடு

வறுமையால் விலைபோன கிட்னி... பலிகடா ஆன குழந்தைகள் ...வறுமைன்னு வந்தா சட்னி கூட மிஞ்சாது...

தந்தி டிவி

திருச்செங்கோடு குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் அரசு மருத்துவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு பெண்ணிடம் கிட்னியை விற்க வற்புறுத்திய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் குழந்தையை விற்க முயன்ற புகாரில், அரசு மகப்பேறு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர்கள் லோகாம்பாள், பாலாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மருத்துவர் அனுராதாவின் 2 மருத்துவமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் புரோக்கர்கள் லோகாம்பாள், பாலாமணி ஆகியோரை செல்போனில் அதிகம் தொடர்பு கொண்ட நபர்களை அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த மீரா என்ற பெண்ணை அழைத்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மீராவின் குடும்ப வறுமையை பயன்படுத்தி அவருடைய கிட்னியை விற்குமாறு லோகாம்பாள் வற்புறுத்தியது தெரியவந்துள்ளது. அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட போலீசார், தொடர்ந்து மற்ற நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்