கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்க 13 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும் விளக்கு எரிப்பதற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 48 ஆயிரம் கிலோ லிட்டர் அளவிலான மண்ணெண்ணெய்யை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த மண்ணெண்ணெய் ரேஷன் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க் மூலமாக விநியோகம் செய்யப்பட்டவுள்ளது. தற்போதைக்கு புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் இந்த மண்ணெண்ணெய் விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.