தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து 2.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்கள்

வெள்ளத்தில் மிதக்கின்றன. மேட்டூர் நகராட்சியில் உள்ள இந்திரா நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதேபோல, மேட்டூர் - பூலாம்பட்டி சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த பகுதியில் உள்ள 16 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் - எடப்பாடி சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இதுவரை 137 டி.எம்.சி நீர் திறப்பு - நடப்பு ஆண்டில் அதிகபட்ச நீர் வரத்து 1,85,000 கன அடி

மேட்டூர் அணையில் இருந்து நடப்பு ஆண்டில் மட்டும் 137 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியாகவுள்ளது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச நீர் வரத்து என கருதப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை