தமிழ்நாடு

Kerala |5 ஆண்டுகளாக தாங்க முடியாத வலி..XRay எடுத்து பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி -கதறி அழுத காட்சி

5 ஆண்டுகளாக தாங்க முடியாத வலி..XRay எடுத்து பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி -கதறி அழுத காட்சி

thanthitv

Kerala | 5 ஆண்டுகளாக தாங்க முடியாத வலி.. XRay எடுத்து பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி - கதறி அழுத காட்சி அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.... கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவைச் சேர்ந்த உஷா ஜோசப் என்பவருக்கு, கடந்த 2021ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்பப்பை கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யபட்டது.. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடுமையான வயிற்று வலி, சிறுநீரில் ரத்த கசிவு போன்ற உபாதைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில், அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள அவருக்கு இன்று அறுவை சிகிச்சை மூலம் கத்திரிக்கோல் அகற்றப்படவுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்