காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கி கடந்த வாரம் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று துறைமுக அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக வந்ததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் பெற்று தந்தனர்.