உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் 4வது பதிப்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை பிரதிபலிக்கும் மற்றுமொரு மைல்கல் இந்த நிகழ்ச்சி என எல்.முருகன் தெரிவித்தார்.