தமிழ்நாடு

ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் நகை ஏஜெண்ட் ஓட்டம்

கரூரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளுடன் வடநாட்டு நகை ஏஜெண்ட் தலைமறைவானதை அடுத்து, கரூர் டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தந்தி டிவி

கரூரில் தனியார் நகைக் கடை ஒன்றுக்கு மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தீபக் மிட்டல் என்பவர் 10 ஆண்டுகளாக நகை சப்ளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் கட்டிகளை வாங்கி சென்ற தீபக் மிட்டல் தலைமறைவாகியுள்ளார். தீபக் மிட்டலுடன் கடந்த 2-ஆம் தேதி முதல் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், கரூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் கடை உரிமையாளர் நந்தா ராஜேஷ் புகார் அளித்தார்.

இதனையடுத்து, கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படை போலீசார் தீபக் மிட்டலை தேடி குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?