தமிழ்நாடு

ஹேக்கர்கள் பிடியில் சிக்கிய மின் வாரிய வாட்ஸ்அப் குழு

தந்தி டிவி

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு

தகவல்களை கொண்டு சேர்க்க, மாவட்ட அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் செயல்படுகின்றன.இதில் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய குழுவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் லோகோவை பதிவிட்டு, ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை கண்டவுடன் செய்தியாளர்கள் சார்பில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை செய்து காவல் துறையினருக்கு தெரிவித்ததை அடுத்து, மின்வாரிய வாட்ஸ்அப் குழு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆண்ட்ராய்டு ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

தற்போது அந்த குழுவில் இருந்து, ஹேக் செய்யப்பட்ட அதிகாரியின் செல்போன் எண் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ