தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி - கந்துவட்டி கொடுமை என விசாரணையில் தகவல்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கரூர் மாவட்டம் பெரிய வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ், இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர், கந்துவட்டிக்காரரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.பணத்தை தருமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் மனம் உடைந்த அந்தோணிராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்தோணிராஜை தடுத்து நிறுத்தினர்.பின்னர் அவர்கள் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக