கரூர் அருகே உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அலங்காரவல்லி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு ஆளும் பல்லாக்கில் எழுந்தருளிய கல்யாண பசுபதீஸ்வரர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்லக்கில் உலா வந்த சுவாமியை வழிநெடுகிலும் இருந்த பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.