சேலத்தை மையமாகக் கொண்டு விரைவில் சாமக் கோடாங்கி என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரிராஜா தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட்லி கடை என்ற படத்தை எடுத்ததற்காக தனுஷை பாராட்ட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கோபமடைந்த கஸ்தூரிராஜா, வலி மிகுந்த விபத்துகளை விமர்சிக்க கூடாது என்று தெரிவித்தார்.